Pokud hledáte čitelné hodnocení casina, MezinarodniOnlineCasino přehledně popisuje uživatelské dojmy, bonusové podmínky a zpracování výplat. Obsah je díky tomu užitečný pro nové i zkušené hráče. Para quienes buscan una visión útil antes de jugar, casino online internacional presenta de manera natural los retiros rápidos y los slots populares. Esto ayuda a valorar la plataforma con expectativas más realistas.
News

சட்டவிரோதமான முறையில் வாகனங்கள் இறக்குமதி : பறிமுதல் செய்யுமாறு உத்தரவு

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் கணனி அமைப்பில் உள்ள தரவுகளை அழித்து சாதாரண கார்களாக பதிவு செய்து சுங்க வரி செலுத்தாமல் சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்ட சுமார் 200 மில்லியன் ரூபா பெறுமதியான இரண்டு சொகுசு வாகனங்களை உடனடியாக பறிமுதல் செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ் நேற்று (06) இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார்.

குறித்த இரண்டு சொகுசு வாகனங்களும் 2005 ஆம் ஆண்டு இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டு இரண்டு சாதாரண கார்களாக பதிவு செய்யப்பட்டு, அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய வருடாந்த வரி அறவிடப்பட்டதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு நீதிமன்றத்திற்கு அறிவித்ததையடுத்து பிரதம நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

வாகனங்கள் கடத்தப்படுவதால் அரசாங்கத்திற்கு 140 மில்லியன் ரூபா சுங்க வரி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், வருடாந்தம் வாகனம் ஒன்றிற்கு 25000.00 ரூபா வீதம் சொகுசு பொருட்களையும் அரசாங்கம் இழந்துள்ளதாகவும் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

இதற்கமைய, 2005 ஆம் ஆண்டு முதல் இதுவரை 150 மேற்பட்ட சொகுசு வாகனங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் அரசுக்கு ஐநூறு கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் ஆணைக்குழுவின் உதவிப் பணிப்பாளர் சம்பந்தப்பெரும தெரிவித்துள்ளார்.

சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்ட முச்சக்கர வண்டி இலக்கம் கொண்ட காரை பதிவு செய்து அரசாங்கத்திற்கு நஷ்டம் ஏற்படுத்தியதாக கூறப்படும் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் கணனி சிஸ்டம் புரோகிராமர் உட்பட 7 பேருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு 60 மேலதிக குற்றச்சாட்டுகளின் கீழ் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளதுடன், இலஞ்ச ஊழல் சட்டத்தின் 70வது பிரிவை மீறி அரசாங்கத்திற்கு நஷ்டத்தை ஏற்படுத்திய ஊழல் குற்றத்திற்கு எதிராக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அரசு தரப்பில் முன்வைக்கப்பட்ட உண்மைகளை பரிசீலித்த பிரதம நீதவான் வாகனங்களை எதிர்வரும் பதின்மூன்றாம் திகதிக்கு முன்னர் சுங்கத்தில் முன்னிலைப்படுத்திய பின்னர் கைப்பற்றி பறிமுதல் செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button