News

கிறீன் சிட்டி திட்டம் ஓட்டமாவடி சுற்றுவட்டாரத்திலிருந்து ஆரம்பம்

 

பச்சை நகர்த்திட்டத்தின் (Green City) கீழ் வாழைச்சேனை தேசிய இளைஞர் படையணியின் நகரை அழகுபடுத்தும் பணி கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச பிரதான நகர சுற்று வட்டத்திலிருந்து ஆரம்பமானது.

கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச சபையின் பங்குபற்றுதலுடன் தேசிய இளைஞர் படையணியினால் முன்னெடுக்கப்படும் நிகழ்வு தேசிய இளைஞர் படையணியின் பொறுப்பதிகாரி லெப்டினன் கேர்னல் எம்.எச்.எம்.றவூப் தலைமையில் நேற்று (14.02.2023) ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் எஸ்.பிரகாஸ், கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எம்.நௌபர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button