News

நான்கு காவல்துறை அதிகாரிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது

திஸ்ஸமஹாராமயவில் சூதாட்ட நிலையமொன்றில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது நபர் ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில் பொலிஸ் பொறுப்பதிகாரி (OIC) உட்பட நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு ஹம்பாந்தோட்டை மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.

திஸ்ஸமஹாராம பொலிஸ் நிலைய குற்றத்தடுப்புப் பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது அவர்கள் ஒருவரை சுட்டுக் கொன்றுள்ளதாக நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் 2005 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 28 ஆம் திகதி இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

மரண தண்டனை விதிக்கப்பட்ட நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்களில், இருவர் தற்போது பொலிஸ் படையில் உள்ளனர், ஒரு அதிகாரி ஹங்கம பொலிஸின் குற்றப்பிரிவு பிரிவிலும் மற்றையவர் அரச புலனாய்வு சேவைகளிலும் இணைக்கப்பட்டுள்ளனர்.

ஒரு பொலிஸ் உத்தியோகத்தர் தற்போது பொலிஸ் படையில் அங்கம் வகிக்கவில்லை எனவும், மற்றுமொரு பொலிஸ் உத்தியோகத்தர் ஓய்வுபெற்றுள்ளதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button