News

சடலம் மீட்கப்பட்டுள்ளது!

நேற்று மாத்தறை கடற்பரப்பில் நீராடச் சென்ற போது காணாமல் போனதாக கூறப்படும் மூன்று பாடசாலை மாணவர்களில் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

மாத்தறை, புறா தீவை அண்மித்த கடற்பகுதியில் மாகந்துர பிரதேசத்தைச் சேர்ந்த 17 வயதுடைய சிறுவனின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கடற்படையினரின் தேடுதல் நடவடிக்கையின் போது மீட்கப்பட்ட சடலம் மாத்தறை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

காணாமல் போன ஏனைய இரு பாடசாலை மாணவர்களை தேடும் நடவடிக்கையில் இலங்கை கடற்படையினர் தொடர்ந்தும் ஈடுபட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button