News

நாட்டின் பொருளாதாரத்திற்கு விரைவில் சாதகமான முடிவு

மக்களால் தெரிவு செய்யப்படும் நாடாளுமன்றத் தேர்தல் மூலம் மாத்திரமே அரசாங்கத்தை மாற்ற முடியும் என அதிபர் ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.

திருகோணமலை விமானப்படை தளத்தில், இன்று (03) முற்பகல் இடம்பெற்ற விமானப்படைக்கு தெரிவான கடட் உத்தியோகத்தர்கள் பயிற்சி பெற்று வெளியேறும் அணிவகுப்பில் உரையாற்றும் போதே அதிபர் ரணில் விக்ரமசிங்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நாட்டின் பொருளாதாரம் தொடர்பில் விரைவில் சாதகமான முடிவுகள் கிடைக்கவுள்ளதாகக் குறிப்பிட்ட அதிபர், பொருளாதார வீழ்ச்சியின் ஊடாக நாடுகள் அராஜக நிலைக்கு மாறும் என்றும், ஒரு நாட்டின் அரசியலமைப்பைப் போன்று, பொருளாதாரத்தையும் ஒருசேர பாதுகாக்க அனைவரும் பாடுபட வேண்டும் என்றும் தெரிவித்தார்.

ஒரு அரசாங்கம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்றத்தால் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுகிறது அல்லது மாற்றப்படுகிறது.

நாடாளுமன்றத் தேர்தல் இல்லாமல் ஆட்சி மாற்றம் சாத்தியமில்லை. வீதிகள் என்பது நாடாளுமன்றத்திற்கான மாற்றுவழியல்ல என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button