News

பேரூந்து கட்டணத்தில் ஏற்படவுள்ள மாற்றம்!

அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி வலுவடைந்து வரும் நிலையில், எரிபொருள் விலை குறைக்கப்பட்டால், ஜுன் மாதம் இடம்பெறவுள்ள பேரூந்து கட்டண திருத்தத்தில், கட்டணக் குறைப்பு இடம்பெறக்கூடும் என இலங்கை தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்த சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன கருத்தொன்றை முன்வைத்துள்ளார்.

மேலும், கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் அடிப்படையிலேயே, தேசிய பேரூந்து கட்டண சூத்திரம் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

“டொலரின் பெறுமதி மற்றும் பணவீக்கத்தின் அடிப்படையில், இந்த நிலைமை அவதானிக்கப்படுகிறது. இதற்கமைய, பணவீக்கம் குறைவடையுமாயின், பேரூந்து கட்டணமும் நிச்சயமாக குறைவடையும் என்ற எண்ணக்கரு உள்ளது.

விலை தளம்பல் குறித்து, நாளாந்தம் ஆய்வு செய்து தரவுகளைப் பெற்றுக்கொள்ளுமாறு தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுக்கு அறியப்படுத்தப்பட்டுள்ளது.” என தெரிவித்தார்.

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button