News

தொடரும் மர்ம மரணம் – மற்றுமொரு இளம் பெண் படுகொலை..!

கொழும்பின் புறநகர் பகுதியான பிலியந்தலை சுவரபொல வீடொன்றில் கைகள் துணியால் கட்டப்பட்ட நிலையில் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அவரது சடலம் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர். 27 வயது திருமணமான பெண்ணே இவ்வாறு மர்மமான முறையில் இறந்துள்ளார்.

 

தொடரும் மர்ம மரணம் - மற்றுமொரு இளம் பெண் படுகொலை..! | 27 Year Old Woman Dies Mysteriously In Colombo

 

 

கடந்த சில தினங்களுக்கு முன்னர் கணவருடன் முரண்பாடு ஏற்படுத்திக் கொண்டு தாய் வீட்டுக்கு வந்த பெண் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சடலம் களுபோவில போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிரேத பரிசோதனை இன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மைகாலமாக இளம் பெண்களின் மர்ம மரணங்கள் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button