News

கல்வி அமைச்சு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

2022 ஆம் ஆண்டில் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட தற்காலிக இடமாற்றங்கள் தொடர்பில் கல்வி அமைச்சு அறிவிப்பொன்றை விடுத்துள்ளது.

கோவிட் தொற்றுநோய் மற்றும் நெருக்கடி நிலைகளைக் கருத்தில் கொண்டு 2022 ஆம் ஆண்டில் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட தற்காலிக இடமாற்றங்கள் மார்ச் 24 ஆம் திகதிக்கு பின்னர் நீடிக்கப்படாது என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

2022 ஆம் ஆண்டு நெருக்கடியான காலகட்டத்தில், பயணம் மற்றும் போக்குவரத்தில் உள்ள சிரமங்களைக் கருத்தில் கொண்டு, ஆசிரியர்களுக்கு நிபந்தனை நிவாரணம் வழங்க கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்தது.

இதற்கமைய ஆசிரியர்கள் அவர்கள் வசிக்கும் இடத்திற்கு அருகில் உள்ள பாடசாலைகளுக்கு தற்காலிகமாக நியமிக்கப்பட்டனர்.

எவ்வாறாயினும், இந்த இடமாற்ற நியமனங்கள் மார்ச் 24 ஆம் திகதிக்கு பின்னர் நீடிக்கப்படமாட்டாது என அமைச்சு தெரிவித்துள்ளது.

இது தொடர்பான விரிவான அறிவிப்பு சம்பந்தப்பட்ட மாகாண மற்றும் வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு அறிவிக்கப்படும் என அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button