News

அடுத்த ஆண்டில் ஜனாதிபதி தேர்தல்..!

அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

எதிர்வரும் ஆண்டு ஆரம்பத்தில் ஜனாதிபதி தேர்தலை நடத்தவும் அதற்கு முன்னதாக எந்தவொரு தேர்தலையும் நடத்தாதிருக்கவும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக உயர்மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எதிர்வரும் 2024ம் ஆண்டு ஆரம்பத்தில் ஜனாதிபதி தேர்தலுக்கு ஆயத்தமாகுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்பாட்டாளர்களிடம் இந்த விடயம் குறித்து அறிவுறுத்தல் வழங்கியுள்ளதாக தேசிய பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button