News

இலங்கைக்கு ஆதரவு வழங்க பல நாடுகள் இணக்கம் – பிரதமர் வெளியிட்ட தகவல்

சர்வதேச மட்டத்தில் உலகின் பெரும்பாலான நாடுகள் இலங்கைக்கு ஆதரவளிக்க தற்போது முன்வந்துள்ளதாக பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

மஹரகம பிரதேசத்தில் அண்மையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டார்.

தற்போதைய அரசாங்கத்தின் கொள்கைத் திட்டம் காரணமாக வெளிநாட்டு வங்கிகளுடன் கொடுக்கல் வாங்கல் செய்வதற்கான கூடுதலான சந்தர்ப்பம் தற்போது உருவாகி உள்ளது.

இலங்கையுடன் இணைந்து செயற்பட்ட அனைத்து வங்கிகளும் மீண்டும் தமது செயற்பாடுகளை ஆரம்பிக்க விரும்பம் தெரிவித்துள்ளன.

இது நாட்டை கட்டியெழுப்பும் செயற்பாட்டின் முதலாவது வெற்றியாகும் என பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button