News

கட்டுநாயக்க விமான நிலையம் தொடர்பில் முறைப்பாடு – எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கை

கட்டுநாயக்க விமான நிலையத்தின் கண்ணியம் மற்றும் நட்புறவை கெடுத்து பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடும் நபர்களுக்கான அபராதத்தை 25000 ரூபாவிலிருந்து 100,000 ரூபாவாக அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இவ்வாறான முறைகேடுகளில் ஈடுபடுவோரை பிடிக்க சிவில் பாதுகாப்பு குழுவொன்றை நியமிப்பதற்கும் சிசிடிவி கமரா அமைப்பை விரிவுபடுத்துவதற்கும் அமைச்சர் தீர்மானித்துள்ளார்.

இந்த முறைப்பாடுகளைப் பெறுவதற்கு விசேட சாளரமொன்றை ஏற்படுத்தவும் அமைச்சர் தீர்மானித்துள்ளார்.

பல விமான நிலையங்களுக்கு உள்ள மரியாதை மற்றும் நட்புறவு கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு இல்லை என வெளிநாட்டவர்களிடமிருந்து பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button