News

இலங்கையில் ஜூன் முதலாம் திகதி நடைமுறைக்கு வரும் தடை!

இலங்கையில் சில பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் பொலித்தீன் ஆகியவற்றின் உற்பத்தி, விநியோகம், விற்பனை மற்றும் பயன்படுத்த தடை விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயத்தை மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவர் சுபுன் எஸ்.பத்திரகே தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (30.03.2023) மத்திய சுற்றாடல் அதிகார சபையினால் நடத்தப்பட்ட சர்வதேச கழிவு நீக்கும் தினத்தை கொண்டாடும் நிகழ்வில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், சர்வதேச வளர்ச்சிக்கான யுனைடெட் ஸ்டேட்ஸ் ஏஜென்சியின் பெருங்கடல் பிளாஸ்டிக் குறைப்பு நடவடிக்கை மற்றும் மத்திய சுற்றுச்சூழல் ஆணையம் இணைந்து சர்வதேச ஜீரோ குப்பை தினத்தை கொண்டாடியது.

2025ஆம் ஆண்டுக்குள் மேலும் பல பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இது தொடர்பான பொருட்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது. சாஸ் பாக்கெட்டுகள் போன்றவை இன்னும் தடை செய்யப்படவில்லை. இந்நாட்டில் நாளாந்தம் ஏறக்குறைய 7,000 மெற்றிக் தொன் குப்பைகள் உருவாகின்றன.

இந்த நாட்டில் உற்பத்தியாகும் 60 வீதமான குப்பைகளை மிக இலகுவாக உரமாக மாற்ற முடியும். மத்திய சுற்றாடல் அதிகார சபை, மேல் மாகாண கழிவு முகாமைத்துவ அதிகாரசபை மற்றும் உள்ளூராட்சி அதிகார சபை என்பன இணைந்து எஞ்சியுள்ள குப்பைகளை மீள்சுழற்சி செய்வதற்கான பொறிமுறையை அமைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், எதிர்வரும் ஜூன் மாதம் முதலாம் திகதி முதல் பிளாஸ்டிக் ஸ்பூன், ஃபோர்க்ஸ், நெகிழி மாலைகள், பிளாஸ்டிக் ஸ்ரோக்கள், பிளாஸ்டிக் குடிநீர் கோப்பைகள் உள்ளிட்ட பொலிதீன் ஆகியவற்றின் உற்பத்தி, விநியோகம், விற்பனை மற்றும் பயன்படுத்த தடை விதிக்கப்படும் எனவும், அதற்கான விதிமுறைகள் வர்த்தமானியில் வெளியிடப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button