News

நாட்டின் பல பாகங்களில் பலத்த மழை – வளிமண்டலவியல் திணைக்களம்!

இன்றைய நாளுக்கான வானிலை தொடர்பான முன்னறிவித்தலை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.

அந்தவகையில், நாட்டின் பல பாகங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என அந்த திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இன்றையதினம் பல இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிக மழை பெய்யக் கூடிய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் பலத்த காற்று வீசும் எனவும், மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்தை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்களை வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button