News

ஐபிஎல் இறுதிப் போட்டி நடைபெறுவதில் சிக்கல்!

விறுவிறுப்பாக நடைபெற்று வந்த ஐபிஎல் தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

இந்தியாவின் ஹகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி விளையாட்டு மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு இறுதிப்போட்டி நடைபெறவுள்ளது.

இன்றைய இறுதி போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், நடப்பு சம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்த்தாடவுள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் 4 முறையும், குஜராத் டைட்டன்ஸ் 1 முறையும் ஐபிஎல் கோப்பையை வென்றுள்ள நிலையில் இன்றைய ஆட்டம் ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் குஜராத்தில் தற்போது நிலவும் வானிலை ரசிகர்களுக்கு சற்று கவலையை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக குஜராத் டைட்டன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் இடையேயான தகுதிப்போட்டி- 2இல் போட்டியின் போதும் மழை பெய்தது.

இன்று பகல் வெளியான வானிலை அறிவிப்பில் மழைக்கான வாய்ப்பு அதிகம் என குஜராத் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

csk-vs-gt-match-is-abandoned-due-to-rain

மழைக்குப் பிறகு போட்டி ஆரம்பித்து குறைந்தபட்சம் 5 ஓவர்களை வீச முடியாவிட்டால், போட்டியை நடத்த மற்றொரு நாள் (ரிசர்வ் நாள்) ஒதுக்கப்படும்.

ஆனால், சில கூடுதல் நிபந்தனைகளும் விதிக்கப்படும். இன்று குறைந்தபட்சம் ஒரு பந்தாவது வீசப்பட்டால், ரிசர்வ் நாள் போட்டி முந்தைய நாள் விட்ட இடத்தில் இருந்து ஆரம்பமாகி நடைபெறும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button