News

அடுத்த ஜனாதிபதி தேர்தல் – மொட்டுவின் வேட்பாளர் ரணில்!

“அடுத்த அதிபர் தேர்தல் எப்போது நடைபெறும் என்பது எமக்கு தெரியாது, அடுத்த அதிபர் தேர்தலில் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளராக ரணில் விக்கிரம சிங்கவை களமிறக்குவது தொடர்பில் இன்னும் தீர்மானிக்கப்படவில்லை.”

இவ்வாறு அமைச்சரவை பேச்சாளரும், அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளர் யார் என்பது தொடர்பில் ஊடகங்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

எதிர்வரும் அதிபர் தேர்தலில் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளராக தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்கவை களமிறக்குவதற்கு முன்மொழியப்பட்டுள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர அண்மையில் தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில், அதிபர் ரணில் விக்ரமசிங்க நாட்டு மக்களினதும், ஆளும் கட்சி உறுப்பினர்களினதும் நன்மதிப்பைப் பெற்றுள்ளதால், வருகின்ற அதிபர் தேர்தலில் அவரை வேட்பாளராக எதிர்பார்ப்பதில் தவறில்லை. இருப்பினும், மொட்டுக்கட்சி இது தொடர்பில் இன்னும் தீர்மானிக்கவில்லை என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button