News

தீர்மானம் எடுப்பதில் தோல்வி; கட்சித் தாவும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள்!

ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானம் எடுப்பதில் தோல்வியுற்றால், அந்தக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்கத் தயாராக உள்ளனர் என்று முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் (06.04.2023) செய்தியாளர்களை சந்தித்தபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும், யார் என்ன சொன்னாலும் ஜனாதிபதி விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்க ஹர்ச டிசில்வா உட்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் தயாராக உள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதியுடன் இணைந்து பணியாற்ற அந்த உறுப்பினர்கள் விரும்புகிறார்கள். எனினும் அவருடன் தேர்தலில் போட்டியிடச் சற்று தயக்கம் காட்டுகின்றனர் என்றும் ராஜித செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button