News

புது வருட முற்பணமாக 30000 ரூபாய் – பெட்ரோலியக் கூட்டுத்தாபனம்

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் ஊழியர்களுக்கு புது வருடத்தை கொண்டாடும் வகையில் முப்பதாயிரம் ரூபா வழங்கப்பட்டுள்ளது.

கூட்டுத்தாபனம் மற்றும் கொலன்னாவை மொத்த விற்பனை நிலையத்தின் நான்காயிரத்து இருநூறு ஊழியர்களின் கணக்குகளில் இந்தத் தொகை வரவு வைக்கப்பட்டுள்ளதாகவும், அதற்காக பன்னிரெண்டு கோடி ரூபாய்க்கு மேல் செலவிடப்பட்டுள்ளதாகவும் கூட்டுத்தாபன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆனால், இந்த பணம் எப்படி கிடைத்தது, பண்டிகை முன்பணமாக கொடுக்கப்பட்டதா அல்லது புத்தாண்டு போனஸாக கொடுக்கப்பட்டதா என்பது அதன் ஊழியர்களுக்கு தெரியவில்லை என அதன் ஊழியர்கள் தெரிவித்தனர்.

முன்னதாக, புது வருட முன்பணமாக பணம் கொடுக்கும் போது, பணியாளர்களிடம் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்யுமாறு கூறியிருந்த நிலையில், இம்முறை அவ்வாறு செய்யாமல், எவ்வித விசாரணையும் இன்றி அவர்களின் கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

தற்போது, ஒக்டேன் 92 பெற்றோல் லீற்றருக்கு 1.63 ரூபாயும், ஒக்டேன் 95 பெற்றோல் லீற்றருக்கு 1.15 ரூபாயும், டீசல் 4 சென்ட் லீற்றர், சுப்பர் டீசல் லீற்றருக்கு 2.26 ரூபாயும், மண்ணெண்ணெய் லீற்றருக்கு 2.66 ரூபாயும் இலாபமாகப் பெறுவதாக அரச வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

மேலும், கடந்த பெப்ரவரி மாதம் 5000 கோடி ரூபாவிற்கு மேல் இலாபம் ஈட்டியுள்ளதாக அரச வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button