News

பயங்கரவாத தடுப்புச் சட்டத்துக்குப் பதிலாக ஊழல் ஒழிப்புச் சட்டம் – சஜித் பிரேமதாச

பயங்கரவாத தடுப்புச் சட்டமூலத்தை அன்றி ஊழல் ஒழிப்பு சட்டமூலத்தையே அரசாங்கம் துரிதமாக கொண்டு வர வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

இதன் ஊடாக பன்டோரா பத்திரங்கள் ஊடாக அம்பலப்படுத்தப்பட்ட ஊழல்வாதிகள் மற்றும் கடந்த காலங்களில் பல்வேறு ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்கள் தொடர்பில் விசாரணைகளை நடத்த முடியும் என தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர், இவ்வாறு குறித்த சட்டமூலத்தைக் கொண்டுவருதன் மூலம் ஊழல்வாதிகளை உரிய முறையில் தண்டிக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

ஆனால் தற்போது அரசாங்கம் ஊழல்வாதிகளை பாதுகாக்கும் சட்டமூலத்தையே கொண்டுவர முனைவதாகவும் அதன் ஊடாக தமது உற்ற ஊழல்வாதி கூட்டாளிகளை அரசாங்கம் பாதுகாப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button