News
O/L பரீட்சைகள் இரண்டு வாரத்திற்கு ஒத்திவைப்பு!
![](https://asalfm.com/wp-content/uploads/2023/03/64-780x470.jpg)
எதிர்வரும் மே மாதம் 15 ஆம் திகதி ஆரம்பமாகவிருந்த 2022 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை இரண்டு வாரங்கள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
பரீட்சைத் திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.
அதன்படி, எதிர்வரும் மே மாதம் 29 ஆம் திகதி கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைகள் ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.