News
சாரதிகளுக்கு பொலிஸாரின் விசேட அறிவிப்பு!
![](https://asalfm.com/wp-content/uploads/2023/03/14-780x470.jpg)
புத்தாண்டு காலத்தில் முக்கிய நகரங்களில் வாகனங்களை நிறுத்தும் போது கவனமாக இருக்குமாறு சாரதிகளுக்கு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
கடந்த சில நாட்களாக முக்கிய நகரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
முறையற்ற முறையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டமையே இதற்குக் காரணம் என பொலிஸார் தெரிவித்தனர்.
சட்டவிரோதமான முறையில் போக்குவரத்தை நிறுத்தும் சாரதிகளுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.