News

இனிப்பு பண்டங்களின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

நாட்டில் பலகாரம் உள்ளிட்ட இனிப்பு பண்டங்களின் விலைகள் அதிகரித்துள்ளதாக சந்தை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இனிப்பு பண்டங்களை தயாரிப்பதற்காக பயன்படுத்தப்படும் மூலப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதால் இவ்வாறு இனிப்பு பண்டங்களின் விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய சீனி, தேங்காய் எண்ணை, பாசிப்பயறு, தேங்காய் உள்ளிட்ட பல மூலப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதற்கமைய, கடந்த வருடம் 40 முதல் 60 ரூபாவிற்கு இடைப்பட்ட விலையில் விற்பனை செய்யப்பட்ட பலகாரம் ஒன்று தற்போது 60 முதல் 100 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button