News

மீண்டும் விஸ்வரூபமெடுக்கும் கோவிட் தொற்று: இந்தியாவில் ஒரேநாளில் 10 ஆயிரத்தைத் தாண்டியது!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கோவிட் பாதிப்பு 10 ஆயிரத்தைத் தாண்டியுள்ளதாக இந்தியச் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கடந்த சில நாட்களாக கோவிட் பாதிப்பு நாள்தோறும் அதிகரித்து வரும் நிலையில், கடந்த 223 நாட்களில் இல்லாத அளவில் நேற்றைய தினம் ஒருநாளில் கோவிட் பாதிப்பு 8 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.

இந்நிலையில், நேற்றைய தினம் (13.04.2023) இந்தியச் சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில், காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 10,158 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் நேற்றுடன் ஒப்பிடுகையில் பாதிப்பு ஒரே நாளில் 30 சதவீதம் அதிகரித்துள்ளது எனவும் கூறியுள்ளது.

மேலும், தினசரி கோவிட் பாதிப்பு 10 ஆயிரத்தைத் தாண்டியிருப்பது கடந்த 8 மாதங்களில் இதுவே முதல் முறையாகும்.

தினசரி பாதிப்பு விகிதம் 4.42 சதவீதமாகவும், இந்த வரத்தின் பாதிப்பு விகிதம் 4.02 சதவீதமாகவும் உள்ளது என்றும் நேற்றைய தினம் அதிகபட்சமாகக் கேரளாவில் 3,416 பேருக்குத் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

அத்துடன், இந்தியா முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 47 இலட்சத்து 86 ஆயிரத்து 160 ஆக உயர்ந்துள்ளதாகவும் இந்தியச் சுகாதாரத்துறை கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button