News

நாளை புனித நோன்புப் பெருநாள்

நாட்டின் பல பாகங்களிலும் இன்று (21) தலைப்பிறை தென்பட்டதால், நாளை (22) புனித நோன்புப் பெருநாளை இலங்கை வாழ் முஸ்லிம் மக்களை கொண்டாடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கொழும்பு பெரிய பள்ளிவாசலின் ஏற்பாட்டில் இடம்பெற்ற தலைப்பிறை பார்க்கும் மாநாட்டில் கொழும்பு பெரிய பள்ளிவாசலின் பிறைக் குழு, அகில இலங்கை ஜமிய்யதுல் உலமா பிரதிநிதிகள், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டிருந்தனர்.

ஹிஜ்ரி 1444 புனித ஸவ்வால் மாதத்திற்கான தலைப்பிறை பார்க்கும் மாநாடு கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இன்று மாலை மஹ்ரிபு தொழுகைக்குப் பின்னர் பிறைக் குழுத் தலைவர் மௌலவி அஸ் ஸெய்க் ஹிஸாம் (பத்தாஹி) தலைமையில் இடம் பெற்றது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button