News

கட்டாரில் வேலைக்கு விண்ணப்பித்தவர்களுக்கான அறிவிப்பு

கட்டார் நாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட இரண்டு பெண்கள் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

குறித்த பெண்கள் கட்டாரில் வேலை வாங்கி தருவதாக கூறி 6 இலட்சம் ரூபா வரை மோசடி செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இது தொடர்பில் மன்னார் பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

சந்தேகநபர்களான பெண்கள் ஊர்காவற்துறை பகுதியைச் சேர்ந்த 31 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

முறைப்பாட்டாளர் பல சந்தர்ப்பங்களில் சந்தேக நபர்களின் கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டுள்ள நிலையில், வெளிநாட்டு கடவுச்சீட்டுகளும் சந்தேக நபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

சந்தேக நபர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button