News

ரணில் உத்தரவு – புறக்கணித்த ஆளுநர்கள்

தமது பதவிகளை இராஜினாமா செய்யுமாறு அதிபர் செயலகத்தினால் அறிவிக்கப்பட்டுள்ள ஆளுநர்கள் அந்தப் பதவிகளில் இருந்து விலகமாட்டார்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.

நீதித்துறையின் முன்னாள் பலம் வாய்ந்த ஒருவருடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னரே இந்த தீர்மானத்தை அவர்கள் எடுத்துள்ளதாகவும் தெரிய வருகிறது.

பதவிகளை இராஜினாமா செய்யுமாறு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளமை தொடர்பில் இந்த முன்னாள் நீதியரசரை சந்தித்து கலந்துரையாடியதன் பின்னர் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

புதிய ஆளுநர்களை நியமிப்பதற்காக நான்கு மாகாணங்களின் ஆளுநர்களை பதவி விலகுமாறு அதிபர் செயலகம் அறிவித்து சில நாட்கள் கடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button