வெளிவிவகார அமைச்சின் தூதரகப் பிரிவின் செயற்பாடுகளில் ஏற்பட்டுள்ள தடை
![](https://asalfm.com/wp-content/uploads/2023/04/162-780x470.jpg)
வெளிவிவகார அமைச்சின் தூதரகப் பிரிவின் செயற்பாடுகள் தடைப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
கணினி கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக தூதரகப் பிரிவின் ஆவணச் சரிபார்ப்பு நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
இதன் காரணமாக கொழும்பில் உள்ள அமைச்சின் அலுவலகம் மற்றும் பிராந்திய தூதரக அலுவலகங்களின் செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கணினி அமைப்பு சீராகும் வரை அவசர ஆவணங்கள் மட்டுமே செயற்படுத்தப்படும் என என்று வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது.
எப்படியிருப்பினும் ஆவணங்கள் சரிபார்க்கப் பணிகளைத் தவிர, தூதரக அலுவலகத்தின் ஏனைய நடவடிக்கைகள் வழமை போன்று மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
கணினி கட்டமைப்பு வழைமைக்கு கொண்டுவந்த பின்னர் அறிவிக்கப்படும் எனவும், யாழ்ப்பாணம், திருகோணமலை, மாத்தறை, கண்டி மற்றும் குருநாகல் ஆகிய பிராந்திய துணைத் தூதரகங்களில் இது தொடர்பான மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.