News

குறைந்த வருமானம் பெறும் குடியிருப்பாளர்களுக்கான இலவச திட்டம்!

குறைந்த வருமானம் பெறும் குடியிருப்பாளர்களுக்கான இலவச சோலார் பேனல்கள் வழங்கும் திட்டம் தொடர்பில் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார்.

அதன்படி 25,000 ரூபாவிற்கும் குறைந்த வருமானம் பெறும் குடியிருப்பாளர்களுக்கு இலவச சோலார் பேனல்கள் வழங்கும் திட்டமானது அமைச்சரவையின் ஒப்புதலைப் பெற்ற பிறகு தொடங்கப்படும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், 500 மெகாவோட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி தேசிய திட்டத்திற்கு சேர்க்கப்படும். இந்த திட்டம் முதலில் இரண்டு கட்டங்களாக செயல்படுத்தப்படும்.

முதற்கட்டமாக 10,000 வீடுகளுக்கும் இரண்டாம் கட்டத்தின் கீழ் 15,000 வீடுகளுக்கும் சோலார் பேனல்கள் மூலம் மின்சாரம் வழங்கப்படும். ஒரு வீட்டிற்காக 2.5 மில்லியன் ரூபா ஒதுக்கப்படும்.

தேசிய வீடமைப்பு மேம்பாட்டு ஆணையத்தின் அறிக்கைகளின்படி, 2015 மற்றும் 2019ஆம் ஆண்டில், பல்வேறு காரணங்களால் கட்டுமானத்தைத் தொடங்கி நிறுத்தப்பட்ட வீடுகளின் எண்ணிக்கை 69000 ஆகும்.

அவற்றில் தேர்ந்தெடுக்கப்பட்ட 25000 வீடுகளுக்கு இந்த திட்டம் செயல்படுத்தப்படும். அந்த வீடுகளின் மேற்கூரையில் அமைக்கப்பட்டுள்ள சோலார் பேனல்கள் மூலம் 20 கிலோவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும்.

வீடுகளில் மின்சாரம் பயன்படுத்தப்படுவதைத் தவிர மிகுதி தேசிய மின்கட்டமைப்பில் சேர்க்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button