News

கொழும்பு துறைமுகத்தில் சிக்கிய சொகுசு வாகனங்கள்

உதிரிப்பாகங்கள் எனத் தெரிவித்து ஜப்பானில் இருந்து சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட நான்கு மிட்சுபிஷி ஜீப் வண்டிகளும் சுபாரு ரக கார் ஒன்றும் இலங்கை சுங்க அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டதாக இலங்கை சுங்க திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்த 5 கார்களின் மதிப்பு சுமார் 10 கோடி ரூபாய் இருக்கும் என அந்த அதிகாரி தெரிவித்தார்.

இந்த 5 கார்களும் இலங்கை சுங்கத்திற்கு கார் உதிரி பாகங்களாக பிரகடனப்படுத்தப்பட்ட கொள்கலனில் கவனமாக கொண்டு வரப்பட்டதாகவும் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button