News

இலங்கையில் பேருந்துகளில் வரும் புதிய நடைமுறை!

பயணிகள் போக்குவரத்து பேருந்துகளின் இயக்கத்தை 24 மணி நேரமும் கண்காணிக்க, பேருந்துகளில் ஜி.பி.எஸ். கருவிகளை நிறுவ அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

நெடுஞ்சாலையில் ஒரு நிறுத்தத்தில் நீண்ட நேரம் நிறுத்தப்படும் பயணிகள் பேருந்துகளை கண்டறிந்து அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க இந்த ஜி.பி.எஸ். உதவும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகளிலும் அனைத்து தனியார் பேருந்துகளிலும் GPS வசதிகள் பொருத்தப்படும்.

உபகரணங்கள் நிறுவும் திட்டம் விரைவில் ஆரம்பிக்கப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி நிலான் மிராண்டோ தெரிவித்துள்ளார்.

மாகாணங்களுக்கிடையிலான நீண்ட தூர சேவைப் பேருந்துகளில் ஏற்கனவே ஜி.பி.எஸ். உபகரணங்கள் நிறுவப்பட்டுள்ளன.

எதிர்காலத்தில் அனைத்து பேருந்துகளிலும் ஜி.பி.எஸ். உபகரணங்களை நிறுவும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக கலாநிதி நிலான் மிராண்டோ மேலும் தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button