News

இம்மாத இறுதிக்குள் விவசாயிகளின் கைகளில் வவுச்சர்கள் – விவசாய அமைச்சர்!

விவசாயிகளின் விருப்பத்தின்படி தேவையான உரத்தை அவர்களே கொள்வனவு செய்வதற்குரிய வவுச்சர்களை வழங்கும் செயற்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

அந்தவகையில், மே மாத இறுதிக்குள் குறித்த வவுச்சர்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

உரக் கொள்வனவிற்கான வவுச்சர்களை அச்சிடும் பணிகளை அரச அச்சகம் முன்னெடுப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

திண்ம உரம் உள்ளிட்ட அனைத்து வகையான உரங்களையும், இந்த வவுச்சர்கள் மூலம் கொள்வனவு செய்ய முடியும் எனக் கூறப்பட்டுள்ளது.

சிறுபோக செய்கைக்கு தரமான விதைகளைப் பயன்படுத்துமாறும், அதனூடாக அதிக விளைச்சலை பெற முடியும் என்றும் அமைச்சர் மஹிந்த அமரவீர மேலும் குறிப்பிட்டுள்ளார்.

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button