News

O/L பரீட்சை தொடர்பான அறிவிப்பு!

கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை தொடர்பான அனைத்து மேலதிக வகுப்புகளும் எதிர்வரும் 23 ஆம் திகதி நள்ளிரவு 12 மணி முதல் தடை செய்யப்படுவதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

சாதாரண தர பரீட்சை மே 29 ஆம் திகதி முதல் ஜூன் 8 ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் 3,568 பரீட்சை நிலையங்களில் நடைபெறும்.

இதற்கமைய 23 ஆம் திகதி முதல், பரீட்சை எழுதுபவர்களுக்கு மேலதிக பயிற்சி வகுப்புகள் நடத்துவது, விரிவுரைகள், கருத்தரங்குகள் நடத்துவது முற்றிலும் தடை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த உத்தரவுகளை யாராவது மீறினால் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்குமாறு பரீட்சை ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button