News

அச்சுறுத்தபோகும் இராட்சத சுனாமி – வெளியாகியுள்ள எச்சரிக்கை..!

இராட்சத சுனாமி ஏற்படுவதற்கான வாய்ப்பு தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

புதிய ஆய்வொன்றின் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்த ஆய்வின் மூலம், அண்டார்டிக்காவில் நீருக்கு கீழ் ஏற்படும் நிலச்சரிவுகளால் பூமியின் வலப்பக்கத்தில் உள்ள கடலில் இராட்சத சுனாமி ஏற்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே ஏற்பட்டுள்ள சுனாமி மில்லியன் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு இதுபோன்ற சுனாமி ஏற்பட்டமைக்கான சான்றுகள் ஆய்வில் மேற்கோள் காட்டப்பட்டுள்ளன.

அத்துடன், இந்த சுனாமி அலைகள் தென் அமெரிக்கா, நியூசிலாந்து முதல் தென்கிழக்கு ஆசியா வரை மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும் சுனாமி எச்சரிக்கைகளை அடையாளம் காணும் தொழிநுட்பம் மேலும் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும் என சம்பந்தப்பட்ட நிபுணர்கள் எச்சரிக்கை விடுக்கின்றமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button