News

இலங்கையின் சாரதி அனுமதி பத்திரங்கள் இத்தாலியில் செல்லுபடியாகுமா – வெளியான அறிவித்தல்

இலங்கையின் சாரதி அனுமதி பத்திரங்கள் இத்தாலியில் செல்லுபடியாகும் என்பது தொடர்பாக அண்மையில் வெளியான செய்திகளை ரோமில் உள்ள இலங்கை தூதரகம் மறுத்துள்ளது.

இலங்கையின் செல்லுபடியாகும் சாரதி அனுமதிப்பத்திரங்களை இத்தாலியில் அங்கீகரிப்பது தொடர்பில் வெகுஜன ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் முரண்பாடானவை என தூதரகம் விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.

இலங்கைக்கும் இத்தாலிக்கும் இடையிலான சாரதி அனுமதிப்பத்திரங்களை பரஸ்பரம் அங்கீகரிப்பதற்கான இருதரப்பு உடன்படிக்கையை புதுப்பித்தல் இன்னும் நடைமுறையில் உள்ளதாக ரோமில் உள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.

ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டவுடன் இத்தாலியில் உள்ள இலங்கை சமூகத்திற்கு முறையாக அறிவிக்கப்படும் என தூதரகம் மேலும் தெரிவித்துள்ளது.

Gallery

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button