News

மைத்திரபால சிறிசேன எடுக்கப்போகும் முடிவு -வழங்கப்பட்டது அதிகாரம்.

அரசாங்க அமைச்சுப் பதவிகளைப் பெற்ற சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் தொடர்பிலான மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அதிகாரம் கட்சியின் தலைவரான முன்னாள் அதிபர் மைத்திரிபாலவிற்கு வழங்கப்பட்டுள்ளதாக சிறி லங்கா சுதந்திரக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் வீரசுமண திஸாநாயக்க தெரிவித்தார்

நேற்று நடைபெற்ற சிறி லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானம் எட்டப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சுப் பதவிகளைப் பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் கட்சியின் மத்திய குழு நீண்ட நேரம் கலந்துரையாடியதுடன், அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது குறித்தும் அவர்கள் தொடர்பில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் கட்சியின் தலைவரான முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளதாக வீரகுமார திஸாநாயக்க மேலும் குறிப்பிட்டார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button