News

இலங்கையின் அனைத்து அரச நிறுவனங்களுக்கும் கட்டாய நடைமுறை

இலங்கையின் அனைத்து அரச நிறுவனங்களுக்கும் கட்டாய நடைமுறை | Action Plans Of Government Institutions Mp Saminda

அனைத்து அரச நிறுவனங்களும் அரசாங்கத்திற்கு சொந்தமான கட்டடங்களில் மாத்திரமே செயற்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று (09.06.2023)  உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

அனைத்து அரச நிறுவனங்களும் வரி செலுத்துவோரின் பணத்தினாலேயே பராமரிக்கப்படுவதாகதவும் தெரிவித்துள்ளார்.

மேலும், அரச சேவை ஐக்கிய தாதியர் சங்கத்திற்கு சொந்தமான கட்டடத்திற்கு மாதாந்தம் 13 இலட்சம், தேசிய லொத்தர் சபைக்கு மாதம் 65 இலட்சம்.

அத்துடன் கொள்ளுப்பிட்டியில் உள்ள மின்சார அமைச்சுக்கு மாதம் 20 இலட்சம், மின்சார சபை நகர அலுவலகத்திற்கு மாதம் 20 இலட்சம் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின் கட்டடத்திற்கு மாதாந்தம் 20 இலட்சம் என பணம் வீணடிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button