News

வவுனியாவில் கைதான பாலியல் தொழிலாளர்களுக்கு HIV தொற்று – விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

வவுனியாவில் கைது செய்யப்பட்ட பாலியல் தொழிலாளர்கள் 7 பேருக்கு தொற்று நோய்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், அவர்களுடன் தொடர்புகளைப் பேணியவர்களை மருத்துவ பரிசோதனையை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வவுனியாவில் பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டவர்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த பரிசோதனையில் 7 பேருக்கு கொனோறியா மற்றும் ஷர்ப்பீஸ் நோய் தொற்றுக்கள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த நோயானது பாலியல் உறவின் மூலம் தொற்றாளரிடம் இருந்து பிறருக்கு பரவக் கூடியது என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

கைது செய்யப்பட்ட 7 பாலியல் தொழிலாளர்களும் வவுனியா நகரம் மற்றும் தேக்கவத்தை ஆகிய பகுதிகளில் பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஆகவே, அவர்களுடன் தொடர்புகளைப் பேணியவர்கள் உடனடியாக வவுனியா வைத்தியசாலையில் உள்ள எச்.ஐ.வி தடுப்பு பிரிவுக்கு சென்று மருத்துவ பரிசோதனையை மேற்கொள்ளுமாறு சுகாதாரப் பிரிவினரால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button