News

சஜித் தரப்புடன் இணையவுள்ள மொட்டுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர்..!

மொட்டுக் கட்சியின் முக்கிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் எதிர்வரும் நாட்களில் சஜித் தரப்புடன் இணைந்து கொள்ளவுள்ளதாக தெரியவந்துள்ளது.

தற்போதைக்கு மொட்டுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் விமல் வீரவன்ச, டலஸ் அழகப்பெரும ஆகியோரின் தலைமையில் இரண்டு குழுக்களாக தனித்தனி கட்சிகளை ஆரம்பித்துள்ளனர்.

அதற்கு மேலதிகமான அனுர பிரியதர்சன யாப்பா தலைமையில் ஒரு அணியும், சரித ஹேரத் தலைமையில் இன்னொரு அணியும் சுயாதீனமாக இயங்கிக் கொண்டிருக்கின்றனர்.

இதுநாள் வரை மொட்டுக் கட்சிக்குள் இருந்து கொண்டிருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களில் சிலரும் தற்போது கட்சி தொடர்பில் கடும் அதிருப்தியைக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இவ்வாறான அதிருப்தியாளர்கள் தரப்பில் இருந்து முக்கியமான நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் எதிர்வரும் நாட்களில் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியில் இணைந்து தங்கள் எதிர்கால அரசியல் செயற்பாடுகளை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளன.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button