News

180 நாட்களை பூர்த்தி செய்த ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம்!

அரசாங்க நிறுவனங்களில் தற்காலிக நாளாந்த ஒப்பந்த அமைய அடிப்படையில் சேவையாற்றி 180 நாட்களை பூர்த்தி செய்த ஊழியர்களை நிரந்தர நியமனத்திற்கு உள்வாங்கும் வேலைத் திட்டம் ஒன்றை பொது நிர்வாக உள்நாட்டு அலுவலர்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சு மேற்கொண்டு வருகின்றது.

இது தொடர்பில் சகல மாகாண சபைகளுக்குமான பிரதம செயலாளர்களுக்கு மிக அவசரமாக மின்னஞ்சல் மூலம் உரிய நிறுவனங்களிடமிருந்து விபரங்களை பெற்று தருமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி கடந்த 15.06.2023 ஆம் திகதி வரை அரச நிறுவனங்களில் 180 நாட்களை பூர்த்தி செய்த தற்காலிக நாளாந்த ஒப்பந்த அமைய அடிப்படையில் சேவையாற்றி வருகின்ற அனைத்து ஊழியர்களின் விபரங்களையும் அனுப்பி வைக்குமாறு வேண்டப்பட்டுள்ளது.

இதனால் நாட்டில் உள்ள சகல அரச நிறுவனங்கள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களில் கடந்த 2014ஆம் ஆண்டு முதல் இன்று வரை கடமைபுரிந்து வருகின்ற பல ஆயிரக்கணக்கான ஊழியர்கள் நன்மை அடையவுள்ளனர்.

குறித்த அமைச்சினால் 15.06.2023 ஆம் திகதி இது தொடர்பில் மின்னஞ்சல் கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டு, அதே தினத்தில் பி.ப 3.00 மணிக்கு முன் தகவல்களை அனுப்பி வைக்குமாறு கேட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button