News

கட்டிடம் கட்ட காத்திருப்போருக்கு அதிர்ச்சி தகவல் – சீமெந்துக்கான வரி அதிகரிப்பு

இறக்குமதி செய்யப்படுகின்ற சீமெந்துக்கான செஸ் வரியை அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூன் 17ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையிலேயே குறித்த வரி திருத்தப்பட்டுள்ளதாக முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி, ஒரு கிலோ கிராம் செயற்கை நிறம் கொண்ட அல்லது நிறமற்ற வெள்ளை சீமெந்து ஒரு கிலோ கிராமிற்கு விதிக்கப்பட்டிருந்த 3 ரூபாய் செஸ் வாி 5 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும், 50 கிலோ கிராம் மற்றும் அதற்கும் குறைவான பொதிகளில் இறக்குமதி செய்யப்படும் ஏனை​ய போர்ட்லேண்ட் சீமெந்து ஒரு கிலோ கிராமிற்கு விதிக்கப்படும் 5 ரூபாய் செஸ் வாி 8 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

அதேவேளை, 50 கிலோ கிராம் மற்றும் அதற்கு மேற்பட்ட பொதிகளில் மொத்தமாக இறக்குமதி செய்யப்படும் ஏனை​ய போர்ட்லேண்ட் சீமெந்து ஒரு கிலோ கிராமிற்காக அறவிடப்படும் 3 ரூபாய் வாி 5 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button