News

அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் விசேட அறிவிப்பு

எதிர்வரும் ஜூலை மாதம் 1 ஆம் திகதி பாராளுமன்றம் கூடும் என பாராளுமன்ற பொதுச் செயலாளர், அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவின் பணிப்புரைக்கு அமைய அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் தினேஷ் குணவர்தன அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, பாராளுமன்றத்தின் 16 ஆவது நிலையியற் கட்டளைகளுக்கு அமைய ஜூலை மாதம் 01 ஆம் திகதி சனிக்கிழமை காலை 09.30 மணிக்கு பாராளுமன்றம் கூடும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன நேற்று (27) விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டிருந்தார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button