News

அரசாங்கத்தின் பிரதான ஊடக நிறுவனங்களில் இருந்து திடீரென பதவி விலகிய தலைவர்கள்

அரசாங்கத்தின் பிரதான ஊடக நிறுவனத் தலைவர்கள் பதவி விலகியுள்ளதாக சிங்கள ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம் மற்றும் லேக்ஹவுஸ் நிறுவனம் என்பனவற்றின் தலைவர்களே இவ்வாறு பதவி விலகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய லேக்ஹவுஸ் நிறுவனத்தின் தலைவர் அனுஷ பெல்பிட்ட பதவி விலகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் தேசிய ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் தலைவர் டபிள்யூ.பி.கனேகே பதவி விலகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஊடக அமைச்சர் பந்துல குணவர்தனவிடம் தமது பதவி விலகல் கடிதங்களை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும், இந்த பதவி விலகல் தொடர்பில் லேக்ஹவுஸ் மற்றும் ரூபவாஹினி கூட்டுத்தாபனம் தரப்பிலிருந்து தகவல்கள் வெளியிடப்படவில்லை.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button