News

இலங்கையில் பெரும் ஆபத்தாக மாறியுள்ள தொடருந்து பயணங்கள்

இலங்கையில் தொடருந்து பயணம் பாதுகாப்பற்றதாக மாறியுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

தொடருந்து பாதைகளில் உள்ள பாங்களை சிலர் எடுத்து சென்றுள்ளமையினால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

போதைக்கு அடிமையானவர்களே இந்த செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளதாக ரயில்வே பொது மேலாளர் வி.எஸ் பொல்வத்தகே குறிப்பிட்டுள்ளார்.

கடந்த சில நாட்களாக பல சந்தர்ப்பங்களில் தொடருந்து தண்டவாளங்கள் தடம் புரண்ட சம்பவங்கள் பதிவாகியிருந்தன.

தொடருந்து தடம் புரண்டதற்கு தொடருந்து உபகரணங்கள் பழுதடைந்ததே காரணம் என தற்போது தெரியவந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button