News

5000க்கும் மேற்பட்ட ஆசிரிய வெற்றிடங்கள்! விரைவில் ஆட்சேர்ப்பு!

வடமேல் மாகாணத்தில் 697 அதிபர் வெற்றிடங்களும் 5098 ஆசிரியர் வெற்றிடங்களும் காணப்படுவதாக அதிபர் சேவைகள் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் சிசிர ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

குருநாகல் மற்றும் புத்தளம் ஆகிய இரண்டு மாவட்டங்களில் 08 கல்வி வலயங்களிலும் 31 பிரிவுகளிலும் இந்த வெற்றிடங்கள் காணப்படுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆட்சேர்ப்பு நடைபெற்று மூன்று வருடங்கள் கடந்துள்ள போதிலும், இந்த வெற்றிடங்களை நிரப்புவதற்கு போட்டிப் பரீட்சைகள் நடத்தப்படவில்லை எனவும், உடனடியாக ஆட்சேர்ப்பு மேற்கொள்ளப்படவேண்டும் எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிலையில், நாட்டில் தற்போது வேலையில்லாமல் இருக்கும் பட்டதாரிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button