News

அரசாங்கத்துடன் இணையுமாறு சஜித்திற்கு அழைப்பு விடுத்த ரணில்!

நாட்டு மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அரசாங்கத்துடன் இணையுமாறு அதிபர் ரணில் விக்ரமசிங்க, சஜித் பிரேமதாச தலைமையிலான எதிர்கட்சிக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தி எங்களுடைய வேலைத்திட்டங்களுடன் இணைந்துகொள்ளும் என எதிர்பார்த்த போதும் அது நடக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

தேசிய கடன் மறுசீரமைப்பு தொடர்பில் எதிர்கட்சியினால் முன்வைக்கப்பட்ட அனைத்துக் குற்றச்சாட்டுக்களும் உண்மைக்குப் புறம்பானதென்பது தெளிவாகியுள்ளது.

எனவே, நாட்டை முன்னேற்றும் வேலைத்திட்டத்திற்கு பங்களிப்புச் செய்த பெருமையுடன் அடுத்த அதிபர் தேர்தலில் களமிறங்குவதற்கான வாய்ப்பை உருவாக்கிகொள்ளுமாறு அதிபர் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button