News

கஞ்சன விஜேசேகர பிறப்பித்துள்ள உத்தரவு! வெளியானது வர்த்தமானி

மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர, பெட்ரோலிய உற்பத்தி உரிமம் வழங்குவது தொடர்பில் பல நிபந்தனைகளை விதித்து உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பான உத்தரவு வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.

பெட்ரோலிய பொருட்கள் விசேட ஏற்பாடுகள் சட்டத்தின் கீழ் அமைச்சரால் இந்த உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

அனுமதிப்பத்திரம் வழங்கும் போது அமைச்சின் செயலாளரிடம் அதிகாரத்தை வழங்குவதற்கு பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

வர்த்தமானியின் படி, ஒரு விண்ணப்பதாரர் நாட்டிற்குள் பெட்ரோலியத்தை இறக்குமதி செய்ய, ஏற்றுமதி செய்ய, விற்க, வழங்க அல்லது விநியோகிக்க முன்வந்தால், அது கம்பெனி சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட நிறுவனமாக இருக்க வேண்டும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும் முதலீட்டு வாரியத்தின் உத்தரவுகளுக்கு இணங்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Gallery

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button