News

மருந்து தட்டுப்பாட்டைத் தவிர்க்க நடவடிக்கை!

தற்போதுள்ள நடைமுறைகளினால் ஏற்பட்டுள்ள மருந்து தட்டுப்பாட்டைத் தவிர்க்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுகாதார அமைச்சின் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

FDA அங்கீகரிக்கப்பட்ட மருந்துகளுக்கு மீண்டும் இந்நாட்டில் நடத்தப்படும் அங்கீகார செயல்முறையை துரிதப்படுத்துமாறும், NMRA செயற்பாட்டின் மூலம் செல்லாது FDA மற்றும் UK அங்கீகரிக்கப்பட்ட மருந்துகளை நேரடியாக கொள்வனவு செய்யும் சாத்தியக்கூறுகளை ஆராயுமாறும், எந்த தடையையும் வெற்றிகொள்வதற்கு உடனடி நடவடிக்கைகளை எடுக்கக்கூடிய வகையில் NMRA சட்டத்திற்கான திருத்தங்களை முன்மொழியுமாறும் ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button