News

அடுத்த 6 மாதங்களுக்கான மின் உற்பத்தி திட்டம் தொடர்பில் விசேட கலந்துரையாடல்

மின்சார சபையின் அடுத்த ஆறு மாதங்களுக்கான மின் உற்பத்தித் திட்டம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

இது தொடர்பான தகவலை மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜயசேகர இன்று(19.07.2023) வெளியிட்ட தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

குறித்த கலந்துரையாடல் அமைச்சர் காஞ்சன விஜேசேகர தலைமையில் மின்சார சபையின் கணினி கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகளுடன் இடம்பெற்றுள்ளது.

மேலும், பராமரிப்பு அட்டவணைகள், மின் தடைகள், நீர்மின் திறன் மற்றும் புதிய போக்குகள் ஆகியவை கலந்துரையாடலின்போது மதிப்பாய்வு செய்யப்படுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button