News

ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை – இலங்கைக்கு இன்று கிடைத்த நற்செய்தி

இலங்கைக்கு வழங்கப்படும் ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை மேலும் நான்கு வருடங்களுக்கு நீடிக்கப்படவுள்ளது.

இதற்கான நடவடிக்கையை  ஐரோப்பிய ஒன்றியம் முன்னெடுத்துள்ளது.

இந்த வருடம் டிசம்பர் மாதம் 31ஆம் திகதி இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கான ஜி.எஸ் பிளஸ் வரிச்சலுகை காலாவதியாகவுள்ளது.

இந்த நிலையில், ஐரோப்பிய ஒன்றிய ஆணைக்குழுவினால் குறித்த பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, எதிர்வரும் 2027ம் ஆண்டு வரை ஜி.எஸ் பிளஸ் வரிச்சலுகை இலங்கைக்கு கிடைக்கும் வகையில் நீடிக்கப்படவுள்ளது.

இந்தக் காலப்பகுதியில், குறித்த நன்மையை பெறும் நாடுகள் எவ்வித நட்டத்தையும் எதிர்நோக்காத வகையில் இந்த வரிச்சலுகை நீடிக்கப்பட்டுள்ளது.

பேச்சுவார்த்தை தொடரும் அதேவேளை, தற்போதைய முறைமையில் எவ்வித மாற்றங்களும் இன்றி, ஐரோப்பிய ஒன்றியத்தினால் பின்பற்றப்படும் 27 சர்வதேச உடன்படிக்கைகளின் கீழ், குறித்த வரிச்சலுகை நீடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button