News

மீண்டும் மோசமான நிலையில் இலங்கை – வரிசைகள் ஏற்படும் ஆபத்து

நாடு மீண்டும் செப்டெம்பர் மாதத்தில் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ள நேரிடும் என பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ மற்றும் நிதி பீடத்தின் பேராசிரியர் அமிந்த மெத்சில தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கைகளை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள தாமதத்தால் இந்த நிலைமை ஏற்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாணய நிதியத்தின் 39 வீத பொருளாதார ஒப்பந்தங்கள் மே மாதத்தில் நிறைவேற்றப்பட வேண்டியுள்ள போதிலும், அரசாங்கம் 10 வீதத்தையே நிறைவேற்றியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொருளாதார நீதிக்கான மக்கள் கூட்டமைப்பு கொழும்பில் நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பேராசிரியர் அமிந்த மெத்சில இவ்வாறு தெரிவித்தார்.

எப்படியிருப்பினும், தற்போதைய பொருளாதார நெருக்கடியின் போது, ​​இந்த வருடத்தின் முதல் காலாண்டில், இலங்கை முதலீட்டுச் சபை நிரந்தரமாக 211 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீடுகளைப் பெற்றுள்ளதாக, முதலீட்டு ஊக்குவிப்பு பிரதி அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button