News

நீர் கட்டணம் செலுத்துவோருக்கு முக்கிய அறிவித்தல்!

பொது மக்கள் தங்களது மாதாதந்த நீர்க் கட்டணத்தை எதிர்வரும் நாட்களில் நீர்மானி வாசிப்பாளரிடம் பணப்பரிமாற்ற அல்லது கடன் அட்டைகளை பயன்படுத்தி செலுத்துவதற்குரிய வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொது மக்களின் வீடுகளுக்கு மாதாந்தம் வருகை தரும் நீர்மானி வாசிப்பாளரிடம் நீர்க் கட்டணத்தை பகுதியாகவோ அல்லது முழுமையாகவே அட்டைகளை பயன்படுத்தி செலுத்தும் வசதிகளை தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை மேற்கொண்டுள்ளது.

இதற்கமைய, பொது மக்களின் சிரமங்களை தவிர்த்து கட்டணத்தை இலகுவாக செலுத்தும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button